Sri Ramana Maharshi Brahmavidyasrama Trust

ஸ்வாத்மஸுகி ஆத்மானந்தம் - பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷியின் 'உள்ளது நாற்பது' (உள்ளபொருளைக் குறித்த நாற்பது செய்யுட்களின் விரிவுரை) ஸ்ரீ ரமணசரணதீர்த்த ஸ்வாமிகள்

No reviews
Price: ₹ 120.00

பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷி அருளிய உள்ளது நாற்பது என்ற நூல், மஹர்ஷியின் உபதேசங்களின் ஸாரத்தை உள்ளடக்கியது. இது ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டுள்ள உண்மையான ஸாதகனுக்கு முழுமையாக, நேரடியாக வழிகாட்டுகிறது. ஸ்ரீ பகவானின் உபதேசங்களின் மையக்கருத்தைக் கிரஹித்துக்கொள்ள, ஒரு ஸாதகனுக்கு இந்த ஒரு நூலே போதுமானது.

ஒருமுறை பக்தர் ஒருவர், ரமண மஹர்ஷியிடம் அருளை வேண்டிப் பிரார்த்தித்தபோது, மஹர்ஷி, “உள்ளது நாற்பதை எப்போதும் பாராயணம் செய். சொற்கள் மறைந்து, அதன் ஸாரம்—ஆழ்ந்த உட்பொருள் மட்டுமாக, உணர்வில் நேரடி அனுபவமாகப் பிரகாசிக்கும் காலம் வரும்,”என்று பதிலளித்தார்.

உள்ளது நாற்பதுக்கு எழுதப்பட்ட விரிவுரையான ஸ்வாத்மஸுகி என்ற இந்த கிரந்தம், பிரம்மவித்யையின் விளக்கமாகத் திகழ்கிறது. ஆழ்ந்த நுண்ணறிவு, கவித்துவமான வெளிப்பாடுகள் மற்றும் மஹர்ஷியின் வாழ்க்கையில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவங்கள் இவற்றால் நிரம்பியுள்ளது. இவையெல்லாம் சேர்ந்து, ஒரு ஸாதகனுக்கு மஹர்ஷியின் ஸாந்நித்யத்தை உணர்வதற்கு உதவுகின்றன. ஸ்வாத்மஸுகி என்ற பெயருக்கு ஏற்றாற்போல், உண்மையான ஸாதகனுக்கு அவனது நிஜ ஸ்வரூபத்தின் பேரானந்தத்தை உணர்த்துகிறது.

முதலில் மலையாளம் மற்றும் தமிழில் வெளியிடப்பட்டு, மிகவும் போற்றப்பட்ட இந்த திவ்ய கிரந்தம் இப்போது ஆங்கிலத்திலும் கிடைக்கப் பெறுகிறது.

Price includes standard shipping and handling. An optional Speed Post service is available at an additional cost, based on estimated shipping and handling charges.

Currently shipping only within India.

For bulk orders, either place multiple orders or contact us at publications@voiceofrishis.org