eBook - ரமண பெரிய புராணம் (பாகம் 1)
'ரமண பெரிய புராணம்' என்பது பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷியின் பக்தர்களில் 75 அணுக்கத் தொண்டர்களின் அத்யாத்ம வாழ்க்கையைக் கூறும் அரிய நூலாகும். இந்நூல், பகவானுடன் மிக அணுக்கமாக இருந்த பக்தர்களின் ஆத்மார்த்தமான அனுபவங்களின் வாயிலாக ரமண பகவானின் மௌனத்தின் காம்பீர்யத்தை, அவரது ஸாந்நித்ய மஹிமையை நம் கண் முன்னே உயிர்ப்புடன் கொண்டு வரும் ஒரு வரலாற்றுப் பதிவாகும்.
தலைசிறந்த சிவ பக்தர்களின் வாழ்க்கையை விவரித்துக்கூறும் பண்டைய தமிழ் காவியமான பெரிய புராணத்தால் ஈர்க்கப்பட்டு, ஆரம்பகாலத்தில் ரமண மஹர்ஷியுடன் இருந்த 75 பக்தர்களின் வாழ்க்கையைக் கூறுகிறது. அந்த மஹாத்மாக்களை, எங்கோ தொலைவில் இருப்பவர்களாக அல்லாமல், பகவானின் ஸாந்நித்யத்தால் செதுக்கப்பட்டு, புனிதமாக்கப்பட்டு அருணாச்சலத்தில் வாழும் "பாறைகளாகவும் கற்களாகவும்" சித்தரிக்கிறது.
இந்நூல் உபதேசத்தை பிரகாசப்படுத்துவது மட்டுமல்லாமல், குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையே நிலவிய புரிதலின் அடிப்படையிலான திவ்ய உறவையும், ஆத்மவிசாரம், சரணாகதி, அருள்சக்தி இவற்றைக் குறித்த ஸூக்ஷ்மமான விஷயங்களையும், ஒரு ஸாதகனில் நிகழும் உண்மையான உருமாற்றத்தையும், எவ்வாறு பண்டிதர்கள், கிருஹஸ்தர்கள், துறவிகள் மற்றும் வெளிநாட்டினர் என்று பலதரப்பட்ட மக்களும் ஒரே ஸத்யவஸ்துவை நோக்கி ஈர்க்கப்பட்டதையும் எடுத்துக்கூறுகிறது.
அணுக்கத் தொண்டர்கள் பகவானிடம் வந்த காலவரிசையின் அடிப்படையில் தனிச்சிறப்புடன் அமைந்துள்ள இந்நூல், ரமண மஹர்ஷியைச் சுற்றிலும் ஒரு அத்யாத்ம சமூகம் எவ்வாறு உருவானது என்பதை விவரிக்கிறது; மேலும், அவரது உபதேசங்களைப் பாதுகாப்பதிலும், அதை எல்லோரும் அறியும்வண்ணம் செய்வதிலும் ஒவ்வொரு பக்தரும் எவ்வாறு பங்களித்தனர் என்பதையும் விவரிக்கிறது.
கதைகளின் தொகுப்பாக மட்டுமில்லாமல், இது அகத்தில் நிகழும் தீர்த்தயாத்திரையாகும். இதை வாசிப்பது அருணாச்சலத்தின் உள் கிரிவலப்பாதையில் நடப்பதற்கு ஒப்பாகும்; அதில் ஒவ்வொரு பக்தரும் ஹ்ருதய-மையத்தைச் சுட்டிக்காட்டும் மௌன வழிகாட்டியாகிறார்.
இந்நூல் வாசகரின் கவனத்தை ஈர்ப்பதோடு மட்டுமில்லாமல், அகமுகமாக ரமணரின் உண்மையான உபதேசம் தொடர்ந்து பிரகாசிக்கும் மௌனத்திற்குள் பிரவேசிக்கச் செய்கிறது.